காஞ்சி பெண் ரவுடியின் கொலை வெறி!

காஞ்சி பெண் ரவுடியின் கொலை வெறி!

தாம்பரம்.முரளி,    

 காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெரிவைச் சேர்ந்தவர் சதீஷ் (31). திமுகவை சேர்ந்த சதிஷ் அப்பகுதியில் கேபிள் டிவி தொழில் நடந்து வந்துள்ளார். அண்மையில் நடந்த தேர்தலில் திமுக கவுன்சிலராக வெற்றி பெற்ற சதிஷ் சிறப்பாக மக்கள் பணியாற்றினார்.

 சமூக அவலங்களைக் காண்டால் கொதிக்கும் அவரை  பெண் தாதா தலைமையிலான கொலைகார கும்பல் வெட்டி சாய்தது.

 பின்வரும் தகவலை இந்த கொலைக்கு காரணமாக சொல்கிறார்கள்.

 அதாவது, நடுவீரப்பட்டு பகுதியில் கள்ள சந்தையில் நடந்த சாராய விற்பனையை குறித்து சதிஷ் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த புகார் சாராய வியாபாரி லோகேஸ்வரிக்கு ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.

  இவர் காஞ்சிபுரத்தில் வளர்ந்து வரும் ரவுடிகளில் ஒருவர். இவர் ஏற்கனவே தனது கணவனை கொலை செய்துவிட்டு அரசியல் பிரமுகரின் செல்வாக்கில் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

   கள்ளச்சந்தையில் மது விற்பது, பாலியல் தொழில், கொலை உள்ளிட்ட பல வழக்குகள் லோகேஸ்வரி மீது உள்ளன. இருப்பினும் காவல் நிலையத்துக்கே சென்று மாமூல் கொடுத்து தனது தொழிலை செய்து வந்துள்ளார். சோமங்கலம் காவல் நிலையத்திற்கு அடிக்கடி லோகேஸ்வரி ஸ்கூட்டியில் சென்று வருவார் என்றும் அவர் பின்னாடி பாடி கார்டுகள் அணி வகுத்து வருவார்கள் என்றும் நடுவீரப்பட்டு வட்டாரம் கூறும் நிலையில் அவர் கவுன்சிலர் சதீஷை கொலை செய்து பெரிதாதாவாக உருவெடுத்துள்ளார்.