ஜோலார்பேட்டை எம் .எல் .ஏ.வின் காரை கேரோ செய்யவைத்த அதிமுகவினர்!

ஜோலார்பேட்டை எம் .எல் .ஏ.வின் காரை கேரோ செய்யவைத்த அதிமுகவினர்!

 ஜி.கே.சேகரன்,

   நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டிற்கு வழி கேட்டு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரின் வாகனத்தை சிறைப்பிடித்து  பொதுமக்கள் 

 திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பன்னாடகுப்பம் ஆத்தூர் பஞ்சாயத்து பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

   இந்த நிலையில் அப்பகுதியில் சுடுகாட்டு வழியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக தெரிகிறது இந்த நிலையில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல மிகவும் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

  இதன் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாரிடம் பலமுறை சுடுகாட்டிற்கு வழி ஏற்பாடு செய்ய மனு கொடுத்ததாக தெரிகிறது.

  இதன் காரணமாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி இன்று ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கேத்தாண்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி கொடுக்கும் நிகழ்ச்சி முடித்துவிட்டு வரும்பொழுது திடீரென  பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரின் வாகனத்தை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  பின்னர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.

 இந்த நிலையில். அருகே இருந்த போதை ஆசாமி ஒருவர் திடீரென அரசு பேருந்தை கையை காட்டி போகவிடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த கலாட்டாவுக்கு அதிமுக வினர் தான் பிள்ளையார் சுழி போட்டார்களாம்.