விமானியாக இறந்த கணவனை போலவே மனைவியும் விமானியாகவே மாண்டார்!

விமானியாக இறந்த கணவனை போலவே மனைவியும் விமானியாகவே மாண்டார்!

 ம.பா.கெஜராஜ்,

   விமானியாக விபத்தில் இறந்த கணவரைப்போலவே அவரது மனையியும் 16 ஆண்டுகள் கழித்து விமானியாகஅ மாண்ட சோகம் ஏற்பட்டுள்ளது. நேபாள விமான விபத்து ஏற்பட்டதில் பெண் விமானி ஒருவரும் அதில் சிக்கி இறந்தார். அவரது பெயர் அஞ்சு கதிவாடா. அவரைப்பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

 நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொகாரா நகருக்கு சென்ற பயணிகள் விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. சேதி ஆற்றின் கரையில் விமானம் மோதி தீப்பிடித்தது. அந்த விபத்தில் 68 பயணிகள், 4 சிப்பாய்கள் என விமானத்தில் இருந்த 72 பேரும் பலியானார்கள்.

 இதில் இந்தியர்கள் 5 பேரும் அடங்குவர். இதுவரை 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் 2 பேரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில் விமான விபத்தில் பலியான பெண் துணை விமானி அஞ்சு கதிவாடாவின் கணவர் தீபக் பொக்ரேலும் விமானி ஆவார். அவர் 2006-ம் ஆண்டு ஜம்பாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

 கணவர் இறந்த பிறகு கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தின் மூலம் அஞ்சு கதிவாடா விமானி பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

 பின்னர். 2010-ம் ஆண்டு நேபாள ஏர்லைன்சி துணை விமானியாக பணியில் சேர்ந்தார். 12 ஆண்டுகள் விமானியாக பணியாற்றி வந்த அஞ்சு, அவரது கணவரை போலவே விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

  விமான கேப்டன் கமலின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அஞ்சு கதிவாடாவின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை.

   குறிப்பாக  விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தான் கேப்டன் கமலிடமிருந்து விமானத்தை அஞ்சுவின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததாக கன்ட்ரோல் அறைவட்டாரம் தெரிவிக்கிறது.