கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைந்து முடிக்க சிபாரிசு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும்' ஸ்மார்ட் சிட்டி' திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று காலை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடைபெற்றது. திட்டங்களை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் , பணிகள், தரமான முறையில் நடைபெற அதிகாரிகள் உரிய கண்காணிப்பு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். .
கூட்டத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சண்முகசுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்.
கோவை மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா , மாநகராட்சி ஆணையர் திரு.பிரதீப் , துணை மேயர் திரு.வெற்றிச்செல்வன் , ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்க அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.