அரசு மருத்துவமனையில்  குழந்தை திருட்டு!  8 மணி நேரத்தில் மீட்ட வேலூர் சரக போலிசார்!

அரசு மருத்துவமனையில்  குழந்தை திருட்டு!  8 மணி நேரத்தில் மீட்ட வேலூர் சரக போலிசார்!

 ஜி.கே.சேகரன்,

  வேலூர் மாவட்டம்  வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்  திருவண்ணாமலையை சேர்ந்த  சுந்தர் மற்றும் சூரியகலா  என்ற தம்பதியருக்கு  கடந்த சில தினங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

    இந்த நிலையில்  அந்த குழந்தையை யாரோ திருடி சென்று விட்டனர்.  இது குறித்து வேலூ£ சரக டிஐஜி எம் .எஸ்.முத்துசாமி இ.கா.ப. மற்றும்¢ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப. தகவல் தெரிவிக்கப்பட்டது.

 அவரின் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார்  மற்றும் வேலூர் கோட்ட காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு  ஆகியோர்  4 தனிப்படைகள் அமைத்து குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.

   அப்போது  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில்  சந்தேகத்திற்கு இடமாக ஒரு குழந்தையை வைத்திருந்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்ததில்  அவர் தான் ஆண் குழந்தையை திருடியவர் என்பதும்  அவர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்பது தெரியவந்தது.

   இதனை அடுத்து  குழந்தையை மீட்டு காவல்துறையினர்  பெற்றோர்களிடம் ஒப்படைத்ததுடன்  குழந்தை திருட்டில் ஈடுபட்ட  பத்மாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  டி.ஐஜி, வேலூர் மற்றும் இராணிப்பேட்டை எஸ்.பி.க்கள் மற்றும் வேலூர் டிஎஸ்பி ஆகியோர் தாயிடம் குழந்தையைமொப்படைத்தனர். அப்போது அந்ததாய்  ஆனந்த கண்ணிரூடன் காவல் அதிகாரிகளை கையெடுத்து கும்பிட்டார்./ ¢ 

  குழந்தை திருடு போன எட்டு மணி நேரத்தில் காவல் துறையினர் குழந்தையை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்ததை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.