ஆபத்தை உணராத மக்கள்!

ஆபத்தை உணராத மக்கள்!

 கு.அசோக்,

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மலட்டாறு ஓடுகிறது. தொடர் கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் கடந்த  ஒரு மாத காலமாக  தரை பாலம் முழுகி வெள்ளம் சென்று கொண்டு இருக்கின்றது.

  இதனால் நரியம்பட்டு குடியாத்தம் செல்லும் வாகனங்கள், பொதுமக்களுக்கு தரை பாலத்தை கடக்க போலீஸார் தடை விதித்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் சாலையைக் கடந்து சென்று வந்தனர்.

  இந்த நிலையில் தமிழக ஆந்திர எல்லைப்பகுதி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  மீண்டும் இடைவிடாத தொடர் மழையால்  நேற்று முதல் திடீரென மலட்டாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகரிப்பால் தனியார் பேருந்து ஒன்றும் ஆற்றின் நடுவில் சிக்கிக் கொண்டது.

  இதனால் போலீசார் மீண்டும் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர்.

  இந்த நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள், மூழ்கிய சாலையை கடக்கின்றனர். இந்த  சம்பவம் பார்ப்போரை பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. 

  உரிய அலுவலர்கள் நடவடிக்கையில் இறங்கினால் நலம்.

 கு.அசோக்,

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மலட்டாறு ஓடுகிறது. தொடர் கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் கடந்த  ஒரு மாத காலமாக  தரை பாலம் முழுகி வெள்ளம் சென்று கொண்டு இருக்கின்றது.

  இதனால் நரியம்பட்டு குடியாத்தம் செல்லும் வாகனங்கள், பொதுமக்களுக்கு தரை பாலத்தை கடக்க போலீஸார் தடை விதித்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் சாலையைக் கடந்து சென்று வந்தனர்.

  இந்த நிலையில் தமிழக ஆந்திர எல்லைப்பகுதி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  மீண்டும் இடைவிடாத தொடர் மழையால்  நேற்று முதல் திடீரென மலட்டாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகரிப்பால் தனியார் பேருந்து ஒன்றும் ஆற்றின் நடுவில் சிக்கிக் கொண்டது.

  இதனால் போலீசார் மீண்டும் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர்.

  இந்த நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள், மூழ்கிய சாலையை கடக்கின்றனர். இந்த  சம்பவம் பார்ப்போரை பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. 

  உரிய அலுவலர்கள் நடவடிக்கையில் இறங்கினால் நலம்.