"ஊட்டச்சத்தை உறுதிசெய்" ஆட்சியர் பங்கேற்பு!

த.நெல்சன்,

   வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதேமில்லத் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" நிகழ்ச்சி நட்டை பெற்றது.

 இத்திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் இன்று  தொடங்கி வைத்தார்.

  பின்னர் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.

  மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட  ஆட்சித்தலைவர்  திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி  உடனடியாக நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஆர்த்தி, தனித்துணை ஆட்சியர் சமுக பாதுகாப்புத் திட்டம் திரு.தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.சுமதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) திருமதி.சுஜாதா மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள்  உடனிருந்தனர்.