மாணவர்கள் நல்வழி பெற தமிழை படியுங்கள்! வேலூர் கலெக்டர் அட்வைஸ்!

மாணவர்கள் நல்வழி பெற தமிழை படியுங்கள்! வேலூர் கலெக்டர் அட்வைஸ்!

 கு.அசோக்,

  மாணவர்கள் ஒழுக்கம் அர்பணிப்புணர்வுடன் உழைப்பு ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் அப்போது தான் வாழ்க்கையில் உயர முடியும் -  தமிழ் மொழி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்லனவற்றையும் அளிக்கிறது ஆகவே அனைவரும் தமிழை படிக்க வேண்டும் தமிழ் இலக்கிய கூடல் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி பேச்சு

 வேலூர் மாவட்டம், வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் இலக்கிய கூடல் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது.

  இதில் அரசு கல்லூரியின் முதல்வர் மலர் தமிழ்புலவர்கள் பதுமனார், பேராசிரியர் சிவராஜ், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநா, நாகராசன் ஆகியோர் பங்கேற்றனா. ¢ இதில் தமிழ் இலக்கியம் குறித்த பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு சான்றுகளை ஆட்சியர் வழங்கினார்.

  மேலும் கிருபானந்தவாரியார், அன்னல் தங்கோ, மு,வரதராசனார் ஆகியோர் திரு உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் தமிழ் மொழியில் திருக்குறள் ஒன்றே அனைத்து தேவைக்கும் ஏற்றது நமது வாழ வேண்டிய வாழ்க்கை முறையும்விளக்குகிறது. மேலும் தமிழை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் அப்போது தான் நாம் நல்வழியை பெற முடியும். திருவாசகம்,திருமந்திரம் தேவாரம் போன்றவைளும் தமிழில் தான் உள்ளது.

   ஆகவே நல்வழியை பெற தமிழை படியுங்கள். மேலும் மாணவர்களாகிய நீங்கள் கல்வி ஒழுக்கம் அர்பணிப்புடனான உழைப்பு ஆகிய மூன்றையும் நீங்கள் கடைபிடித்தால் மாணவர்களாகிய நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம் என பேசினார்

  பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்களில் ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டமும் நடந்தது,  இதிலும் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பங்கேற்று ஓய்வூதியர்களின் குறைகளை கேட்டறிந்தார்.