வெறி நோய் தினத்தை முன்னிட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி!

கு.அசோக்,
வேலூரில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் துவங்கினார்
வேலூர்மாவட்டம், வேலூர் கால்நடை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் கால்நடைத்துறையின் சார்பில் செல்ல பிராணிகளுக்கும் கால்நடைகளுக்கும் வெறிநோய் தடுப்பூசி தினத்தை முன்னிட்டு தடுப்பூசி முகாமானது நடைபெற்றது இதனை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் துவங்கி வைத்தார்
¢ இதில் கால்நடைத்துறை அலுவலர்கள் கோபி கிருஷ்ணா, அந்துவன், வேலூர் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த முகாமில் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டதுடன் குடற்புழு நீக்க மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
இதன் மூலம் வெறிநோய் பரவுவதால் செல்லபிராணிகளுக்கு தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதில் திரளானோர் செல்லபிராணிகளை அழைத்து வந்து அவைகளுக்கு தடுப்பூசி போட்டு சென்றனர்.