திருப்பத்தூர் நகராட்சியின் மெத்தனத்தால் வேகமாக பரவும் டெங்கு! பெண் குழந்தை உயிரிழப்பு!!

திருப்பத்தூர் நகராட்சியின் மெத்தனத்தால் வேகமாக பரவும் டெங்கு! பெண் குழந்தை உயிரிழப்பு!!

 ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல்! ஒரு பெண் குழந்தை உயிரிழப்பு!

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை 3 வது வார்டு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45)  உயிரிழந்து விட்டார் இவருடைய மனைவி  சுமித்ரா(35) ஆகிய தம்பதியினருக்கு பிரித்திகா (15) தாரணி (13)

யோகலட்சுமி (7) அபிநிதி(5) புருஷோத்தமன் எட்டு மாத கைக்குழந்தை என ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

 இந்த நிலையில் யோகலட்சுமி அபிநதி புருஷோத்தமன் ஆகிய குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்ததினர். அதில் யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய இரண்டு குழந்தைகளும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டார் இந்த நிலையில் நேற்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மேலும் புருஷோத்தமன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.