தடை செய்யப்பட்ட பரிசுச் சீட்டுகளால் ஏழைகள் சீரழிந்து கொண்டிருக்கின்றனர்:-மருத்துவர் ச.ராமதாசு காட்டம்!!

ஜி.கே.சேகரன்,
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசு ராமதாஸ் தடைசெய்யப்பட்டுள்ள பரிசுச்சீட்டு பிசினஸை ஊத்தி மூட வேண்டும் என்று டுவிட் செய்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகப்பெரிய சமூகத் தீமைக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிகின்றனவோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றன.
சேலத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டு விற்பனை நடைபெற்று வருவதை காட்சி ஊடகம் மூலம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது! சேலம், சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளும், ஒரு நம்பர் பரிசுச்சீட்டுகளும் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த சமூகத் தீமையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது! ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகப்பெரிய சமூகத் தீமைக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிகின்றனவோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றன! தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டே பரிசுச்சீட்டுகள் தடை செய்யப்பட்டு விட்டன. அந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் வீதிக்கு வருவதை தடுக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வேலூரில் ஒரு நம்பர் லாட்டரி பிசினஸ் அமோகமாக நடைபெற்று வருகிறது அதற்கு ஜெயகரன் என்கிற காவல் துறையைச் சேர்ந்தவர்தான் பாஸாம்.
அதேபோல் ஒன்றாம் நம்பர் லாட்டரி சீட்டுக்கு தலைமை இடமே குடியாத்தம் தானாம் இங்குள்ள ஒரு டிஎஸ்பி அதற்கு சப்போர்ட் என்கிறார்கள்
அது சரி,