சமூக விரோத கூடமாவதற்கு முன் திறந்து விடுவீங்களா சார்?

ஜி.கே.சேகரன்,
சோளிங்கரில் புதிய வட்டாச்சியர் அலுவலகம் திறக்கப்பட்டும், அவை செயல்படாமல் உள்ளது அதனை திறக்கவும் பல கோடி மக்கள் பணம் வீணாவதை தடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை.
இராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ,விதவை சான்றிதழ், ரேஷன் கார்டு, தேர்தல் அடையாள அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பெற சுமார் முப்பது கிலோ மீட்டர் சென்று வாலாஜாவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வாங்கி வந்தனர்.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
இதை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வட்டாட்சியர் அலுவலகம் வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த 31 .12.2021 அன்று தமிழக அரசு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆணை பிரப்பித்தது. அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பழைய பேரூராட்சி கட்டிடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்போது இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டது.
தொடர்ந்து சொந்தமாக கட்டிடம் வேண்டு என்பதற்காக 2020 - 21 ஆம் நிதி ஆண்டில் 3.7 கோடி மதிப்பில் சோளிங்கர் அரக்கோணம் நெடுஞ்சாலையில் பயணியர் மாளிகை அருகே புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது.
புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுகளாகியும் இதுவரை புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது.
புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது காந்தி சாலையில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் வாகனங்கள் நிறுத்த போதிய வசதியில்லாததால் அலுவலக வாசலில் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் வரும் வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக தற்போது கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட நிர்வாகம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.