இஜாப் பெண்களை மிரட்டிய விவகாரம்! தற்கொலைக்கு முயன்றனரா?

ஜி.கே.சேகரன்,
இஸ்லாமிய பெண்கள் சிலர் இஜாப் அணிந்துக் கொண்டு வேலூர் கோட்டைக்குள் வந்து செல்வதாக தகவல்கள் இருந்து வந்தன. அதுவும் காதலர்களுடன் சுற்றுவதாக தெரிந்ததும், இளைஞர்கள் சிலர் பொங்கி எழுந்து கோட்டைக்குள் வந்த காதலர்களை எச்சரித்து அதை வீடியோவாக பதிவு செய்தனர்.
மேலும் இஜாப் பெண்களின் செல் எண்களை வாங்கிக்கொண்டு அவர்களை முக்கால் மணி நேரம் போனில் பேசி மிரட்டியிருக்கிறார்.
அதே போல் காதலர்களையும் மிரட்டினர்.
இதனால் காதல் ஜோடிகளில் சிலர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள்.
அதையறிந்த போலிசார் குறிப்பிட்ட பெண்ணை தேடிபிடித்து காப்பாற்றியிருக்கிறார்கள்.
இஜாப் பெண்களுக்கு டார்ச்சர் என்று வெளிநாடுகளுக்கும் விவரங்கள் பரவியதன் பேரில், உயர் போலிஸ் அதிகாரிகள் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டனர்.
அந்த வகையில் வழக்குபதிவு செய்து இஸ்லாமிய பெண்களை மிரட்டி வீடியோ எடுத்த மாங்காய் மண்டியை சேர்ந்த சந்தோஷ் (22) ,வேலூர் கருகம்புத்தூரை சேர்ந்த இப்ராஹிம் ,கணியம்பாடியை சேர்ந்த இர்பான் பாஷா (23),கருகம்புத்தூர் அஷ்ரப் பாஷா(20),கொணவட்டத்தை சேர்ந்த முகமது பயாஸ் ,மற்றும் பிரசாந்த் (20 மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகிய 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அப்படியிருக்க கைதானவர்களின் உறவினர்கள் வடக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர், மேலும் த. தி. மு. க. நிறுவனர் ஜி .எஸ். இக்பால், தமிழ்நாடு சுன்னத் ஜாமாத்தின் மாவட்ட செயலாளர் எச்.ஷெரிப்பாஷா, அ.ம. மு .க மாநில சிறுபான்மை பிரிவு பிரதிநிதி எம்.தமீம்மரைக்காயர், இந்திய தேசிய லீக்கட்சியின் மாவட்ட தலைவர் சவுகத், ம.ஜ.க. யாசின் மற்றும் கட்சியினர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வேலூர் மாவட்ட எஸ்.பி.எஸ்.ராஜேஷ் கண்ணா,இ.கா.ப. அவர்கள் அவர்களை அழைத்து உண்மையில் என்ன நடந்தது என்பதை எடுத்துரைள்ளார்.
அதன் பின்னர் மக்கன் பகுதிக்கு சென்ற எஸ்.பி. அங்கேயே பல மணிநேரம் முகாமிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.
மேற்படி விவகாரம் தொடர்பாக வேலூர் கோட்டைக்குள் போவோர் வருவரை கண்காணிக்க போலிசார் நிறுத்தப்பட்டிருப்பதோடு, அங்கு புறகாவல் நிலையம் அமைக்கவும் ஏற்பாடாகிறதாம்.