பணம் செலுத்தி மருத்துவ வசதி பெரும் முறை! அமைச்சர் திறந்து வைத்தார்! குரோமியம் கழிவு கலப்பை தவிர்க்க 15 கோடி!

ஜி.கே.சேகரன்,
நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவமனைகளில் தானியங்கி முறையில் பணம் செலுத்தி மருத்துவ வசதிகளை பெறும் வசதி சி.எம்.சி ராணிப்பேட்டை மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. - ராணிப்பேட்டையில் உள்ள குரோமியக் கழிவுகளை வெளியேறாத வகையில் தடுப்பதற்காக ரூ.15 கோடியில் முதற்கட்டமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம் தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.
ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கில் உள்ள கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் டிஜிட்டல் ஹெல்த் கியோஸ்க் ஆகியவைகள் துவக்க விழா மருத்துவ கல்லூரியின் இயக்குநர் விகரம் மேத்யூ தலைமையில் நடைபெற்றது.
கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி இதனை துவங்கி வைத்தார். இதில் தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் மருத்துவ கண்காணிப்பாளர் ராஜேஷ் மற்றும் துணை பொது கண்காணிப்பாளர் துரை ஜாஸ்பர் உள்ளிட்ட பல கலந்துகொண்டனர்
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சி.எம்.சி மருத்துவமனை ராணிப்பேட்டையில் மாஸ்டர் செக்கப் கட்டமைப்பை துவங்கியிருக்கிறது. பசுமை தமிழகம் திட்டம் மூலம் தமிழகத்தில் 33 சதவிகிதம் மரங்கள் அளவை உயர்த்த கடந்த ஆண்டு 2.80 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. 10 கோடி மரங்களை நட இலக்கை வைத்து மரங்களை நட்டு வருகிறோம். குரோமியம் வேதி நிறுவனம் 1995 ஆம் ஆண்டு மூடப்பட்டது அதனை பாதுகாப்பாக அகற்ற மாசுகட்டுபாட்டு வாரியம் மூலம் நேரடியாக ஆய்வு செய்து குழு அமைக்கப்பட்டு, அதனை எவ்வாறு கையாளவது என்று ஆராயப்படும். அந்த வகையில் முதற்கட்டமாக ரூ.15 கோடி செலவீட்டில் குரோமியம் கழிவு கலப்பை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என சொன்னார்.
இந்த குரோமிய கழிவைப்பற்றி நேற்று தான் பாஜக தலைவர் அண்ணாமலை பொது வெளியில் பரபரப்பாக பேசியது நினைவுகூற தக்கதாகும்.