நான்கு மாதங்களில் அதிக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது! வேலூர் ஆட்சியர் பகீர்!

ஜி.கே.சேகரன்,
நான்கு மாதங்களில் அதிக அளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,அடுத்த ஆண்டு முதல் கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் - வேலூர் விமான நிலைய பணிகள் விரைந்து முடிக்க இடம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசிடம் கோரியுள்ளோம், அவை வந்த பிறகு பணிகள் நிறைவடையும் - குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவில் கடைகள் அமைக்க மத சம்பந்தமாக எந்த தடையும் விதிக்கவில்லை மோதல் ஏற்படாமல் இருக்கவே கடை அமைக்க தடைவிதித்துள்ளோம் - ஓராண்டு சாதனை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி.
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார் இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பெற்றுகொண்டார் இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வேளாண்மை துறை, நெடுஞ்சாலை துறையில் பணிகள் அதிக அளவு நடந்துள்ளது. பள்ளிகொண்டா பேர்ணாம்பட்டு பகுதிகளில் உழவர் சந்தைகள் அமைக்கப்படவுள்ளது.
வேலூர் விமான நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது, இதற்கு நிலம் கையகப்படுத்தியதால் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதில் அவர்களுக்கு உரிய இழப்பீடு உயர்த்தி கேட்டுள்ளனர்.
அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது அது வந்தவுடன் பணிகள் நிலம் கையகப்படுத்திய பின்பு பணிகள் நிறைவு பெறும்.
சென்னையில் விமான நிலைய கூட்டம் 12 ஆம் தேதி நடக்கிறது இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
வேலூர் மாவட்டத்தில் கோடை விழா நடத்த இடங்களை தேர்வு செய்து வருகிறோம், அடுத்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் கோடை விழா நடத்தப்படும்.
குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா அரசு மத நோக்கத்தில் எந்த தடையும் விதிக்கவில்லை இருபிரிவினர் பிரச்சணை உள்ளதால் சட்ட ஒழுங்கு பிரச்சணை ஏற்படாமல் இருக்க கடை அமைக்க தடை விதித்துள்ளோம் ஆனால் விழாவை நடத்தலாம்.
பள்ளிகொண்டா மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் புதியதாக உழவர் சந்தை அமைக்கவுள்ளோம் கஞ்சா 10 ஆண்டுகளில் இல்லாத அளவு 4 மாதங்களில் அதிக அளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கள்ளச்சாராயம் விற்பவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.