ஆம்புலன்ஸிக்காக வழி விட்ட மறியல்காரர்கள்!

ஆம்புலன்ஸிக்காக வழி விட்ட மறியல்காரர்கள்!

கு.அசோக்,

 கலவை அருகே சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் கண்டன போராட்டத்தை நடத்தினர்

  இராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் வருகின்ற 28-ஆம் தேதி அன்று சாலைகள்  ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முன் அறிவிப்பு கடிதமானது  இன்று நெடுஞ்சாலை அதிகாரிகளின் மூலமாக வழங்கப்பட்டிருந்தது.

  இந்த நிலையில் சாலை ஆக்கிரமிப்பு முன் அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதியை சேர்ந்த  ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விட மாட்டோம் என தெரிவித்து சாலையில் அமர்ந்தவாறு  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று  சைரன் ஒலியுடன் வந்த நிலையில் போராட்டக்காரர்கள் ஒதுங்கி வழிவிட்டனர்.

   சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலவை வட்டாட்சியர் இந்துமதி மற்றும் ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பிறகு பேச்சுவார்த்தை தொடர்ந்து தற்காலிகமாக சமரசம் செய்து போராட்டத்தை பொதுமக்கள் அனைவரும் கைவிட்டுச் சென்றனர்.

  இதனைத் தொடர்ந்து திடீர் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அனைத்து வாகனங்களும் ஆமை போல் ஊர்ந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.