உண்டியல் காணிக்கை மேட்டரை பூதக்கண்ணாடியில் பார்க்கும் எடப்பாடி! அமைச்சர் சேகர் பாபு பேட்டி!

ஜி.கே.சேகரன்
மத்திய அரசின் தொல் பொருள்துறை கட்டுபாட்டில் உள்ள வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை, அது தவறானது - வள்ளலார் நாட்டிற்கு பொதுவுடமை பொது அறிவை தந்தவர் ஆனால் வள்ளலார் குறித்து கருத்து கூறி ஆளுநர் சனாதனத்தை திணிக்கிறார் அது ஆளுநரின் அறியாமையை காட்டுகிறது - இந்து சமய அறநிலையத்துறை காலி பணியிடங்கள் தேர்வாணைய தேர்வுகள் மூலம் நிரப்படுகிறது காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் - உண்டியல் காணிக்கை வெளிப்படைதன்மையில்லை என பூதக்கண்ணாடியை கொண்டு எடப்பாடி உண்மைக்கு புறம்பாக கூறுகிறார் வேலூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.
வேலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வள்ளலார் சனதானம் என ஆளுநர் பேசுகிறார் ஆனால் வள்ளலார் நாட்டிற்கு பொதுவுடமையையும் பொது அறிவையும் தந்தவர் வள்ளலார் குறித்து கருத்து கூறிய தமிழக ஆளுநர் சனாதனத்தை திணிக்கிறார்.
அது ஆளுநரின் அறியாமையை காட்டுகிறது.
இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள உதவி ஆணையர் பணியிடங்கள் முதல் அனைத்து பணியிடங்களும் அரசின் தேர்வாணைய தேர்வுகள் மூலம் நிரப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் தமிழக அரசின் மூலம் படிப்படியாக நிரப்பப்படும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களின் உண்டியல் காணிக்கையை எண்ணுவதில் வெளிப்படை தன்மை இல்லை என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவது பூதக்கண்ணாடியை வைத்துகொண்டு உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்.
வேலூர் கோட்டையிலுள்ள ஜலகண்டீஸ்வரர் கோவில் என்பது மத்திய அரசின் தொல் பொருள்துறை கட்டுபாட்டில் உள்ளது அதில் இந்து சமய அறநிலையத்துறை ஆட்கள் நியமிப்பது உள்ளே செல்வதும் தவறானது என அமைச்சர் கூறினார்.
பேட்டியின் போது அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் உடனிருந்தார்.