2000 தனியார் கடைகளுக்கு அனுமதி? 500 அரசாங்க கடைகள் மூடல்? நல்ல கதையா இருக்குதே என்கிறார் கிருஷ்ணசாமி!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
2000 தனியார் கடைகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு 500 அரசாங்க சரக்கு கடைகளை மூடுவதா என்று விணா எழுப்பியுள்ளார் புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் கிளை தேர்தல் அலுவலகத்தை கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ராஜபாளையத்தில் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில்
டாஸ்மாக்கை நிரந்தரமாக தமிழகத்தில் மூடிட வேண்டும் என்ற பிரச்சாரத்தினுடைய மையங்களாகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருகின்ற அந்த அறிவிப்பு வருகின்றம வரையிலும் புதிய தமிழகம் கட்சி தன்னுடைய பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த அலுவலகங்கள் செயல்படும்.
ஏற்கனவே அமைச்சராக இருந்த பாலாஜி அவர்கள் 2000 தனியார் கடைகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு 500 அரசாங்கத்தினுடைய கடைகளை மூடுகிறார்.
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுக் கூடங்களுக்கு எஃப் எல் 3 லைசன்ஸ் வழங்கிவிட்டு அந்த தனியார் கடைகளுக்கு பாதிப்பு வரக்கூடிய மதுபான கடைகளை மட்டும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கும் பூரண மது விலக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுவும் உள்நோக்கமானது தான்.
திமுக அரசு ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்து தமிழ்நாட்டை சுரண்டுகின்றனர். கொள்ளை அடிக்கின்றனர். கல்குவாரி மணல் குவாரி என கிடைக்கும் அத்தனை துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. இதைத்தான் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கிறது
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் ஊழல் தற்போது டாஸ்மாக் துறையில் ஊழல் என ஒரு அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும்போது அத்தனை அமைச்சர்களையும் சேர்த்தால் எத்தனை கோடி ஊழல் வரும். தமிழகத்தை இல்லாமல் செய்யும் வேலையை திமுக தான் செய்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குட்டிச்சுவராக இருக்கிறது. திமுகவை பொருத்தவரை மின்சார கட்டணம் உயர்வு சாலை வரி உயர்வு என தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
சென்னையில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் என்பது நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை, பல சிக்கல்களை இது ஏற்படுத்தும் என்று சொன்னார்.