தேர்தல் திருவிழாவில் காணாமல் போகடிக்கப்படுகிறாரா ஓ.பி.எஸ்.! வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை!

தேர்தல் திருவிழாவில் காணாமல் போகடிக்கப்படுகிறாரா ஓ.பி.எஸ்.! வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை!

ம.பா.கெஜராஜ்,

 இரட்டை இலை சின்னம் பெற சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் புறக்கணிப்பு என வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை அவற்றை யாரும் நம்ப வேண்டாம் என ஓ.பி.எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இது போன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் முதற்கண் கேட்டுக் கொள்கிறேன்.

இரட்டை இலை சின்னம் பெற சட்டப்பூர்வ நடவடிக்கை

  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

   வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் "இரட்டை இலை" சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதனை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து 'இரட்டை சிலை" சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நல்லாட்சி தர மோடியால் மட்டுமே முடியும்

இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சிக்கு நமது ஆதரவினை தெரிவித்துள்ளோம்.

 இதன் அடிப்படையில்,கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்கள் அனைத்தையும் நானே தெரிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வதந்திகளை நம்ப வேண்டாம்

  எனவே, இதற்கிடையே பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 தனி சின்னத்தில் தான் போட்டி,

  நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது இல்லை எனவும் இரட்டை இலை சின்னம் அல்லது தனி சின்னத்தில் தான் போட்டி யிடுவோம் என பாஜக தலைவர் களிடம் க ழ க ஒருங்கிணைப்பாளர் தங்கமகன் ஓ பி எஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி

18 வது மக்களவை பொது தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது இந்த மக்களவை பொது தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதே போல அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரனும் பாஜக கூட்டணியில் சேர முடிவு செய்து தொடர்ந்து கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

 பாஜக கூட்டணியில் இரு கட்சிகளுக்கும் தலா 4 தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ள தாக கூறப்படுகிறது.ஆனால் தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என பாஜக தலைவர்களை இருவரும் வற்புறுத்தி வருகின்றனர்.

குக்கர் சின்னத்தில் டி.டி.வி தினகரன் போட்டி

இதில் அமமுக தங்களின் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளது. ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறார் என்பது புதிராக உள்ளது.

அவர் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளார். மேலும் வரும் மக்களவை பொது தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனவும் கூறி வருகிறார். தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிட்டால் என்ன செய்வது? தனி சின்னத்தில் போட்டியிடலாமா? என அவர் ஆலோசித்தும் வருகிறார்.

தாமரை சின்னத்தில் போட்டி இல்லை

இதற்கிடையில் பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் 4தொகுதிகளில் போட்டியிடுமாறு பாஜக தலைவர்கள் தங்கமகள் ஓ.பி.எஸ் சிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

தனி சின்னத்தில் தான் போட்டி

 ஆனால் அதை ஏற்க  ஓ பி எஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவை மீட்க போராடி வரும் நிலையில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எதிர்கால அரசியலை பாதிக்கும்,  தொண்டர்களின் கனவை சிதைத்ததாக ஆகிவிடும் எனவே தனி சின்னது தில் தான் போட்டியிடுவோம் - என பாஜக தலைவர்களிடம்  ஓ.பி.எஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார்.