அரசு ஆஸ்பத்திரியில் சீட்டு போட ரூ.50! தற்காலிக ஊழியரின் பணி பறிப்பா?

கு.அசோக்,
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் ரசீது கொடுப்பதற்கு பணம் வாங்கிய தற்காலிக ஊழியர்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனை தற்போது மாவட்டம் மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு புற நோயாளிகளாக தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
உள்நோயாளிகளாக 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்படி வரும் நோயாளிகளுக்கு சீட்டு போடும் இரவு பணியை பாலமுருகன் என்பவர் செய்து வந்தார்.
இதனிடையே மருத்துவமனை அவசர சிகிச்சை புறநோயாளிகள் பிரிவில் ரசீது கொடுக்கும் தற்காலிக ஊழியர் பாலமுருகன் என்பவர் நோயாளிகளிடம் பணம் கேட்டுப் பெறும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இதனிடையே குடியாத்தம் அரசு மருத்துவமனையில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செழியன் அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் துறை ரீதியான விசாரணை வேலூரில் நடைபற்றது.
லஞ்சத்தைப்பற்றி தெளிவான வீடியோ இருக்கு, அது பற்றி அந்த ஊழியர் மிகத்தெளிவாகவும் பேசுகிறார்..ஆகையால் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணி பறிக்கப்படும்.