கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம்! டுபாக்கூர் விளம்பரத்தை நம்ப வேண்டாம்!

ஜி.சாந்தகுமார்,
கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்' என, பட்டதாரிகளுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, கூட்டுறவு துறை விடுத்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
:மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் விளம்பர அறிக்கை போலியாக வெளியிடப் பட்டுள்ளது. தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில், காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படும் என்றும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விளம்பரம் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் மேற்கண்ட போலி விளம்பரத்தை பார்த்து, பொது மக்கள் ஏமாற வேண்டாம்; மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது, காவல் துறை வாயிலாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.