கத்தியை காட்டி மிரட்டிய ரெட் டாக்சி டிரைவர்! தர்மடி வாங்கினார்

  ஜெ. அருண் ஹென்றிக்ஸ்,

  கோயம்பத்தூர் பகுதியில் சமீபகாலமாக ரெட் டாக்சி ஓட்டுநர் சிலரின் அராஜகம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. வண்டியை புக் செய்து வரும் பயணிகளிடம் கூடுதல் பணம் கேட்டு வம்பு செய்வது, லக்கேஜ் கொஞ்சம் எடுத்துக் கொடுங்க என்றால் இறக்கி வைத்துவிட்டு நூறு கொடுங்க இருநூறு கொடுங்க என்று பணம் பறிப்பது என்று தொல்லை ஏற்படுத்துகிறார்கள்.

   இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பயணிகள் எவரும் போலிசில் புகார் அளிக்க வருவதில்லை என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க இயலாமல் உள்ளது.

  இந்த சந்தர்ப்பத்தை சில டாக்சி டிரைவர்கள் தங்களுக்கு வசதியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 அந்த வகையில் தற்போது கோயம்புத்தூர், திருச்சி ரோடு பாலத்தின் மீது ரெட் டாக்ஸி ஓட்டும் நபர் அருகில் வந்த வண்டியை முட்ட வைத்து நிறுத்தியுள்ளார்.

  பின்னர் கத்தி எடுத்து காட்டி எதிர் வண்டிக்காரரை மிரட்டியுள்ளார்.

  அதை பார்த்த பொதுமக்கள் ஏங்க கத்தியை எடுக்கறிங்க என்று அந்த ஓட்டுநரை கேட்டதற்கு ஆமாம் எடுப்பேன், குத்தலையே சந்தொஷப்படுங்க என்று தெனாவட்டாக சொன்னான்.

  அதற்கு மேல் வேடிக்கை பார்க்காத ஜனங்கள் அவனை நாலு மொத்து மொத்தி அனுப்பிவைத்தார்கள். அது தொடர்பாக வீடியோ வெளியாகியுள்ளது.

  ரெட் டாக்ஸி ஓட்டும் நபர்களின் அராஜகம் தொடர்வது குறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் அறிந்திருந்தும் அவர்கள் எந்த ஒரு பொறுப்பும் ஏற்கவில்லை.

  சபாஷ்.