வீடியோகாலில் நிர்வாணமாக வர வேண்டும்! இல்லா விட்டால் என மிரட்டியவர்கைது!

உ.சசிகுமார்,
பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு படம் வந்திருந்தது. அதில் அவர்களின் முகத்தை மார்பிங் செய்து அவர்கள் நிர்வாணமாக இருப்பதுபோல படம் இருந்தது. அதற்கு கீழ் ஒரு எண்ணை குறிப்பிட்டு, இந்த எண்ணில் வீடியோகாலில் நிர்வாணமாக வர வேண்டும்! இல்லா விட்டால் இந்த படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து 4 பெண்களும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் அந்த எண்ணை வைத்து விசாரித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த விக்னேஷ் என தெரியவந்தது. இவர் மெக்கானிக்கல் என்ஜினியர். இவர் திருமணமாகி மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விக்னேஸை கைதுசெய்தனர்.
இந்த சம்பவம் புதுகை மாநிலத்தில் நடந்துள்ளது.