ஆபத்து பயணம்!

ஆபத்து பயணம்!
கு.அசோக்,
குடியாத்தம் நகர மையப்பகுதியில் ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தி வந்த தரைப்பாலம் மூழ்கியது- ஆபத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள்-ஆபத்தை உணராத ஆற்றில் குளித்து மகிழும் சிறுவர்க.ள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள மோர்தானா அணை தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து தமிழக ஆந்திர எல்லையோரம் பெய்த கனமழை காரணமாக மோர்தானா அணையில் இருந்து தற்போது 989 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு கௌவுடன்யா ஆற்றின் வந்து கொண்டுள்ளது.
இதனிடையே குடியாத்தம் நகர மையப் பகுதியில் கௌவுண்டனயா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் பாலம் ஆம்பூர், பேரணாம்பட்டு, திருப்பத்தூர்,கே.ஜி.எப். பகுதிகளுக்கு ஒரு வழிப்பாதையாக பயன்பட்டு வந்தது.
தற்போது குடியாத்தம் கௌவுடண்யா நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலம் மூழ்கி தரை பாலத்தின் மேல் தற்போது தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
அப்படியிருக்க ஆபத்தை உணராமல் பாலத்தில் வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது வாகனங்களை ஓட்டிச்செல்கின்றனர்.
மேலும் கௌண்டண்யா மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர்
மாவட்ட ஆட்சியர் நீர்நிலைகளில் குளிக்க தடை விதித்து உத்திரவிட்ட நிலையில் இளைஞர்கள் சிறுவர்கள் குளிப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.