முருங்கை காயுடன் வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிச்சாமி!

ஜி.கே.சேகரன்,

  காய்கறி மார்க்கட்டுக்குள் சென்ற எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்த வியாபாரிகளிடம் துண்டுப் பிரச்சாரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது முருங்கைக்காய் கட்டை கையில் எடுத்துக்கொண்டு நிறைய பேர் இதை வாங்கிட்டு போறாங்களா என்று கேட்டார். அப்போது ஒரு பெண் வியாபாரி பழனிச்சாமியிடம், அய்யா உங்க ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று கூறினார்.

  மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இராணிப்பேட்டை, வேலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளிலும் மற்றும் திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

திருவண்ணாமலை தொகுதி - திருப்பத்தூர்!

 திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் போட்டிடுகின்றா£.¢ அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க, திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் காலை தினசரி மார்க்கெட்டுக்குள் எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.  அங்குள்ள காய்கறி வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.  மேலும் துண்டு பிரசுரங்களை வழங்கி கலியபெருமாளை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 அப்போது அப்போது முருங்கைக்காய் கட்டு ஒன்றை எடுத்த அவர் நிறைய பேர் இதை வாங்கிட்டு போறாங்களா? மேலும் கீரை கட்டு எடுத்துக்கொண்டு, கீரையை சாப்பிட்டால் எதற்கெல்லாம் நல்லது என்று தெரியுமா? என்று கேட்டார். பின்னர் ஒரு பெண் வியாபாரி பழனிச்சாமியிடம், அய்யா உங்க ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று கூறினார்பெண்மணி ஒருவர் தமிழகத்திற்கு நீங்க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என கூறினார்.

வேலூர்- கந்தநேரி

பின்னர் வேலூர் பள்ளிகொண்டாஅருகேயுள்ள கந்தனேரியில் வேலூர் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து பேசுகையில் வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களின் ஜீவாதாரமாக விளங்குவது பாலாறு ஆனால் தற்போது பாலாற்றில் ஆந்திர அரசு ஏற்கனவே 18 அணைகளை கட்டிவிட்டனர்.

இப்போது மீண்டும் மிகவும் உயரமான தடுப்பணையை கட்டி வருகிறது.

 அப்படி ஆந்திர அரசு அணையை கட்டி முடித்தால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. விவசாயம் கடுமையாக பாதிக்கபடும். மேலும் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கும்.

 எனவே தமிழக திமுக அரசு கும்ப கர்ணன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தமிழக விவசாயிகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பதற்கு முன்வராத பாஜகவுடன் மருத்துவர் ராமதாஸ் அணி சேர்ந்திருக்கிறார்.

மக்கள் அவரிடம் இதைப் பற்றி கேட்க வேண்டும் என்று பேசினார்.

இராணிப்பேட்டை - பாண்டியநல்லூர்.

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக திமுக அரசு கும்ப கர்ணன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

  சோளிங்கர் பாண்டியநல்லூர் பகுதியில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது,  நான் முதல்வராக இருந்த போது வேலூர் இராணிப்பேட்டை மாவட்டங்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். நாளை வேலூருக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து என்னுடன் விவாதிக்க தெம்பும் திராணியும் அவருக்கு இருக்கிறதா என பேசினார்.

 இந்த பிரச்சார பயணத்தின் போது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி உடனிருந்தார்.