யார் ஆளவேண்டும்? மக்கள் தீர்மானித்துவிட்டனர்! காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பிரச்சாரம்!

கு.அசோக்,
வேலூர் மற்றும் திருப்பத்தூரில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை வாக்குகளை சேகரித்தார் மத்திய பாஜக அரசு மக்களை பிரித்தாள்கிறது என பேச்சு.
வேலூர்மாவட்டம்,வேலூர் கொணவட்டத்தில் திமுக சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை வாக்குகளை சேகரித்தார் அவருடன் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் டீக்காராமன் சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹீத் பாஷா உள்ளிட்டோரும் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்
இதே போன்று திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை திருப்பத்தூர் காங்கிரஸ் நகர மைதானத்தில் வக்குகளை சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது இந்திய பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக வரும் எனக் கூறினார். ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் அவரவர் வங்கிக் கணக்கிற்கு 15 லட்சம் வரும் என கூறினா£.¢ உண்மைக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினார்.
யார் ஆள வேண்டும்? யார் ஆளக்கூடாது என மக்கள் முடிவு செய்துவிட்டனர். மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் தவித்த போது பிரதமர் மோடி வரவில்லை. அரசு அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நினைக்கின்ற ஒரு நாடு எந்த விதத்திலும் உச்சநீதி மன்றத்தில் கொட்டு வாங்காது.
உச்ச நீதிமன்றம் பலமுறை எச்சரித்துள்ளது. எதையும் மோடி காதில் வாங்குவதில்லை. ஐநா சபையும் இரண்டு நாட்களுக்கு முன் கண்டித்திருக்கிறது.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் முதலமைச்சர்களை கைது செய்தீர்கள்.
அமலாக்க துறையை ஏவி விடுகிறீர்கள், வருமான வரி துறையை சிபிஐ துறையை பயன்படுத்துகிறீர்கள். இதெல்லாம் கண்டிக்கத்தக்கது.
அது மட்டுமல்ல 139 ஆண்டுகள் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் பணத்தை திருடுகின்றனா.¢ 135 கோடி எங்கள் கணக்கில் இருந்த வருமான வரி ஒப்புதல் இல்லாமல் எடுத்திருக்கிறது. இந்த தேர்தல் இந்திய தேசத்தையும் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கின்ற தேர்தல் ஆகவே இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என பேசினார்.