தேர்தல் பிரச்சாரத்தை சூடேற்றும் கச்சத்தீவு விவகாரமும் - சீனாவின் பெயர் மாற்ற பிரச்சனையும்!

ம.பா.கெஜராஜ்,
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்.19 அன்று நடைபெறுகிறது. அனல் பறக்கும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள், சுயேட்சை வேட்பாளர்களின் நகைச்சுவையான பிரச்சாரங்கள் என களம் அமர்களப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கச்சதீவை குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஆர்.டி.ஐ.) மூலம் பகீர் தகவல்களை திரட்டியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீக்குச்சி பற்ற வைத்திருக்கிறார்.
அதை மையப்படுத்தி பிரதமரும் தனது எக்ஸ் பதிவில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த்தார்.
அதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பதில் அளித்தனர்.
''கச்சத்தீவை மீட்போம் என இன்று கூறிவரும் பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?'' என்றும், ''10 ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்'' என பதில் கனையை வீசியிருக்கிறார்கள்.
இன்றைய நிலவரத்துக்கு கச்சதீவு விவகாரம் தான் பிரச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.
இது இப்படியிருக்க அருணாசலப் பிரதேசத்தில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான 30 இடங்களுக்கு சீன தங்களது பெயரை சூட்டியிருக்கிறது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிக்கையில், பெயர் வைத்துவிட்டால் அது அவர்களுடையது என்று அர்த்தம் இல்லை என்று பதில் அளித்திருக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடடாளுமன்ற தேர்தலுக்கு முன் புல்வாமா தாக்குதல் நடந்ததை இந்தியர்கள் நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டோம். அது மறக்கக்கூடியதுமல்ல.
அதே போல் தான் தற்போது சீனா, இந்திய தேர்தல் நேரத்தில் நம்மை சோதித்து பார்க்கிறது.
கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்ததற்கு முக்கியக் காரணம், அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையில் 30 இடங்களை சீனா பெயர் மாற்றம் செய்திருப்பதை மறைக்கவே என்பது அம்பலம் ஆகியுள்ளது.
இந்திய எல்லைப் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 10 ஆண்டாக அதிகரித்து வந்துள்ளது. இந்திய எல்லையில் சுமார் 4,000 கி.மீ பகுதியை சீனா அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டில் கூட அருணாச்சல பிரதேசத்தில் அசல் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய பகுதியில் 4.5 கிமீ தொலைவுக்கு சீனா ஊடுருவியதோடு, அங்கு 101 குடியிருப்புகளை கட்டி புதிய கிராமத்தையே உருவாக்கியது. இது குறித்து வெளியான சாட்டிலைட் படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது.
தற்போது அருணாசல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீனா மற்றும் திபெத்திய மொழிகளில் புதிய பெயர்களை சீன சிவில் விவகார அமைச்சகம் சூட்டியுள்ளது. இது மே 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேற்கண்ட இடங்களுக்கு பிற மொழி பெயர்களை குறிப்பிடுவது சீனாவின் பிராந்திய உரிமைகோரல் மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை என சீனா உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் சீனாவின் செயல்பாடு விரும்பத்தக்கது அல்ல.
இது போன்ற சூழலில் தான் ஆர்.டி. ஐ. தகவலை மேற்கோள் காட்டி கச்சதீவு விவகாரம் கிளம்பியிருக்கிறது.
விவாதித்து வருகின்றனர்.
எது எப்படியிருப்பினும் தேர்தல் காலங்களில் கச்சத்தீவை மீட்க்கப்படும் என்ற வாக்குறுதிகளை நம்புவதற்கு தமிழக மீனவர்கள் ஏமாளிகள் அல்ல என்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஊடகங்களுக்கு சொல்லிவருகிறார்கள்.
குறிப்பு:- ஆர். டி. ஐ. மூலம் பெறப்பட்ட தகவல் குறித்த முக்கிய அம்சங்களை விரைவில் உங்களது லைவ்லுக் டிஜிட்டல் மீடியாவில் வாசிக்கலாம்.