தலித்துகளுக்கான நிதியை மடைமாற்றுவதா? மக்கள் சமதர்ம பேரியக்கம் கண்டனம்!

டி.முகமது இர்பான்,
தலித்துகளுக்கான நிதியை பிற பணிகளுக்காக மாற்றும் புதுச்சேரி மாநில அரசை வன்மையாக கண்டிப்பதாக தமிழக மக்கள் சமதர்ம பேரியக்கத்தின் தலைவர் கஜேந்திரன் கூறியிருக்கிறார்.
அது பற்றி அவர் சொன்னதாவது. புதுச்சேரி மாநிலத்தில் எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு உட்கூறு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை மடை மாற்றம் செய்து வேறு துறைக்கு செலவிட்டு வருகிறார்கள்.
இதே வேறு துறைக்கு ஒதுக்கிய நிதியை மேற்படி எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்களின் நன்மைக்காக அந்த துறைக்கு மாற்றம் செய்வீர்களா>
ஆக இந்த வன் கொடுமையை கண்டித்து எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் போராட்டம் நடத்தியுள்ளது.
இந்த போராட்டத்தை மக்கள் சமதர்ம பேரியக்கம்-தமிழ்நாடு சார்பில் ஆதரிக்கிறோம்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும் இது போன்ற நிதி மடை மாற்றம் செய்யப்படுகிறது, இந்த சட்ட மீறலையும் கண்டிக்கிறோம் என்கிறார்.