டாஸ்மாக்:- பீர் பிராந்திக்கு பில் கொடுத்தே தீரனுமாம்! கட்டிங் போச்சா?

டாஸ்மாக்:- பீர் பிராந்திக்கு பில் கொடுத்தே தீரனுமாம்! கட்டிங் போச்சா?

  த.மதன்,

  தமிழக அரசின் மதுபானக் கடையான டாஸ்மாக்குகளில் விற்கப்படும் சரக்குகளுக்கு கட்டாயம் பில் வழங்க வேண்டும்.       இந்த உத்தரவை அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றிக்கையாக அனுபிய்யுள்ளார்.

 அதில், 'டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் உயர்ரக மதுபானம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், தினசரி சிட்டா, சரக்கு இருப்பு மற்றும் விற்பனை உள்ளிட்ட 21 பதிவேடுகளை முறையாக நாள்தோறும் பராமரிக்க வேண்டும்.

 ஆய்வின் போது இந்த ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

  பீர் மற்றும் பிராந்தி வகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக பில் வழங்க வேண்டும்.

அந்த பில்லில் சரக்கின் பெயர், அளவு, அரசு நிர்ணயித்த விலை மற்றும் கடை ஊழியர்களின் கையொப்பம் இருக்க வேண்டும்.

  மதுபானங்களின் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்' என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

  இந்த சுற்றறிக்கை கிடைக்கப்பெற்ற சம்மந்தப்பட்ட மாவட்ட அலுவலர்கள் பலர் கட்டிங் போச்சே என்று வருத்தத்தில் உள்ளனராம்.

  ஏன்னா, அரசு விலையை விட கூடுதலான விலைக்கு விற்றாய் என்று சொல்லியே டாஸ்மாக் சேல்ஸ் மேன்கள் மற்றும் சூப்ரவைசர்களை மேற்படி அலுவலர்கள் கடைந்தெடுத்து கறந்து வந்தனர்.

  ஆனால் தற்போது மேலாண் இயக்குநரின் அறிவிப்புக்கு பின்னார் அந்த கட்டிங் போயே போச்சு.