தலை விரி கோலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவிகள்!

ஜி.கே.சேகரன்,
வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டைமாவட்டங்களில் நீட் தேர்வினை 12மையங்களில் 7042 மாணவ,மாணவிகள் தேர்வினை எழுதினார்கள் .
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய அளவிலான நீட் நுழைவுத் தேர்வானது மேற்படி மூன்று மாவட்டங்களில் உள்ள 12 மையங்களில் 7042 மாணவ,மாணவிகள் தேர்வினை எழுதினர்.
வேலூர் பகுதியில் சிருஷ்டி வித்யாஸ்ரமம்,டிகேஎம்கல்லூரி.ஸ்ரீபுரம் நாராயணி பள்ளி,சன்பீம் பள்ளி,வள்ளல் கிருஷ்ணசாமி பள்ளி ஸ்பார்க் பள்ளி.சென்னாங்குப்பம் வித்யா லட்சுமி பள்ளி கலில் தேர்வானது நடந்தது.
ராணிப்பேட்டை டி.ஏ.வி பெல் பள்ளி,சோளிங்கர் வித்யா பீடம் ,திருப்பத்தூர்மாவட்டத்தில் வாணியம்பாடியில் மருதகேசரி ஜெயின் கல்லூரி ஆகிய 12 மையங்களில் இந்த நீட் தேர்வுகள் நடந்தது.
மாணவர்கள் நுழைவு சீட்டு அடையாள சான்று எடுத்து செல்லவும் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல அனுமதித்தனர்.
மற்றவை கடுமையான சோதனைக்கு பின்னர் அனுமதித்தனர். ஆனால் தகவல் தொடர்பு சாதானங்கள் ஆபரணங்கள் கைகடிகாரம்,எலெக்ட் ரானிக் சாதனங்கள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.
தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மேலும் கடுமையான வெப்பம் இருப்பதால் தடையில்லா மின்சாரத்திற்கும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள் நீட் தேர்வு எழுதவும் சென்று வரவும் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.