பாலியல் குற்றச்சாட்டு எங்கோ நடக்கும் செய்தி:- அதற்கு எப்படி பிரதமர் பதில் சொல்வார்! ஏ.சி.சண்முகம் பேட்டி!!
ஜி.கே.குலசேகரன்,
பாலியல் குற்றச்சாட்டு எங்கோ நடக்கும் செய்தி:- அதற்கு எப்படி பிரதமர் பதில் சொல்வார்
வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் பீஞ்சமந்தை பாலாம்பட்டு ஜார்தான் கொல்லை மூன்று ஊராட்சிகளில் மறு வாக்குபதிவு குறித்து நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் புதிய நீதிக்கட்சியின் தலைவரும் பாஜக வேலூர் தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் பேட்டி
வேலூர்மாவட்டம், வேலூரில் புதிய நீதிக்கட்சியின் தலைவரும் பாஜக வேலூர் தொகுதியின் வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூரில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். நாங்கள் கலந்துரையாடலில் யார்யார் தவறு செய்தார்கள் என்ன நடவடிக்கை என்பதை பார்த்து தான் முடிவு செய்வோம்.
பாலியல் குற்றச்சாட்டு எங்கோ நடக்கும் செய்தி, அதற்கு எப்படி பிரதமர் பதில் சொல்வார், பீஞ்சமந்தை ஜார்தான் கொல்லை,பாலாம்பட்டு,மூன்று பஞ்சாயத்துகளிலும் எங்களில் ஏஜெண்டை அனுமதிக்கவில்லை. இதை மாவட்ட ஆட்சியரிடம் புகார் சொல்லினோம். எங்களுக்கும் பாதுகாப்பு கேட்டோம் அது நடைமுறைக்கு வரவில்லை. மறுவாக்கு பதிவு நடத்திட மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையாளர் ஆகியோரிடம் புகார் அளித்தோம் ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் பின்னர் வாக்கு எண்ணிக்கைக்கு பின் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இந்தியாவில் ராகுல் காந்தி அலை என்பதில்லை அவர் ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் தேர்தல் பணியாற்றியவர்கள் எனக்காக குறையில்லாமல் பணியாற்றினார்கள் சிறு சிறு தவறுகள் நடப்பது தான் என்று கூறினார்.
அவருடன் பாமக நிர்வாகிகள் என்.டி.சண்முகம் இளவழகன், பாஜக வெங்கடேசன், ஓ.பி.எஸ். அணி அப்புபால் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.