"வாழ்வோ, சாவோ இங்கேயே தான் இருப்போம்! கொதிக்கும் சென்னை மீனவர்கள்!

"வாழ்வோ, சாவோ இங்கேயே தான் இருப்போம்! கொதிக்கும் சென்னை மீனவர்கள்!

 ம.பா.கெஜராஜ்,

 சென்னை மெரினா கடற்கரை பகுதியிலுள்ள பக்கவாட்டு சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

  கடந்த 13 ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து  அந்த பகுதியில் மீன்கடை போட விடமா அதிகாரிகள் தடுப்பதே அதற்கு காரணம்.

 இதனால்  6 நாளா வருமானம் இழந்து போராடவும் செய்ய தூண்டியிருக்கிறார்கள்.

 இதன் பின்னணியில் பொது நல வழக்கு உள்ளது.

 சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாகம் வரை உள்ள பக்கவாட்டு சாலையில் மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகக் கூறி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பக்கவாட்டு சாலையின் ஓரத்தில் “ஆக்கிரமித்திருக்கும் மீன் கடைகளை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும்” என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

 மேலும் வழக்கு விசாரணையின் போது,  மேற்படி பகுதியில்,  மீன் கடைகள் செயல்படுவதால் வாகன நெரிசல் மட்டுமின்றி பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக நீதிபதி சுந்தர் இந்த விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார். அந்த பகுதியினருக்காக மீன் மார்க்கெட் அமைக்கும் பணிகள் ஆறு மாத காலத்துக்குள் முடிந்துவிடும், அதுவரை எந்த இடையூறும் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்வதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே.ரவீந்திரன் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

 ஆனால் நீதிபதிகளோ அதுவரைக்கும் காத்திருக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் "மீன் கடைகளின் ஆக்கிரமிப்பை போலீஸ் உதவியுடன் அகற்ற வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

 அதே போல், நீதிபதி பாலாஜி, “சிங்காரச் சென்னை எனச் சொல்கிறீர்கள். ஆனால், கடற்கரையை ஒட்டியுள்ள சாலையில் இருக்கும் நிலைமை அழகானதாக இல்லை,” என்று சொல்லியிருக்கிறார்.

 இதைத் தொடர்ந்து தான் பக்கவாட்டு சாலையில் செயல்பட்டு வந்த மீன் விற்பனைக் கடைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி இறங்கியது.

  இதற்கு மீன் வியாபாரிகள் பலத்த எதிர்ப்பு காட்டி வருகிறார்கள். கடலில் பாயும் படகை சாலையின் குறுக்கே நிற்கவைத்து தங்கள் எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளனர்.

 இது குறித்து மீனவ சங்கத்தினர் தெரிவிக்கையில், “2015ல ஒரு ஐஏஎஸ் அதிகாரி மெரினா சாலையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த 6 மீனவப் பெண்களை அழைச்சுப் பேசுனாங்க. ரோடு சரியில்ல, ஸ்கூல் போற புள்ளைங்களுக்கு ரொம்ப டிராஃபிக் ஆகுது. அதனால நீங்க கடைகள நடைபாதையில வெச்சுக்குங்க அங்கயே நிழற்குடை அமைச்சு கொடுத்துடுறோம், அங்கயே வியாபாரம் செஞ்சுக்குங்க என்று சொன்னாங்க.

நாங்களும் கலந்து பேசிட்டு முடிவு செய்றதா சொல்லிட்டு வந்தோம். ஆனா அதுக்கு ஒரு தீர்வு காண்பதற்கும் முன்னாடியே, இரவோட இரவா ஸ்ரீவாசபுரத்துல தொடர்ச்சியா 12 அடிக்கு இருந்த நடைபாதைய எடுத்துட்டு சாலையை விரிவுபடுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

 நாங்க அப்பவும் தடுத்தோம். ஆனா, அதுக்கு அவங்க, 'நாங்க ரோடு போட்டதா கணக்கு காட்டிக்குறோம். நீங்க நடைபாதை இருந்த இடத்துல எப்பவும் போல வியாபாரம் செஞ்சுக்குங்க. யாரும் எந்தப் பிரச்னையும் கொடுக்க மாட்டாங்க” அப்படினு உத்தரவாதம் கொடுத்தாங்க.

ஆனா, அன்னைக்கே நாங்க அதைய எழுத்துப்பூர்வமா வாங்கிருக்கணும். வாய்ப் பேச்சோட நிப்பாட்டிருக்க கூடாது.

கடலோரப் பகுதியே மீனவக் குடிகளுக்குத்தான் சொந்தம் “வாழ்வோ, சாவோ இங்கேயே தான் இருப்போம்.

 “1984-ல் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார், அப்பவே எதிர்த்து நின்னு உயிரைத்தான் விட்டோமே தவிர,  இந்த இடத்தை விட்டுக்கொடுக்கல. இந்த கடல் மண் மீதான எங்க உரிமைய விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என்றனர்.

ஆனால் இது உயர்நீதிமன்ற உத்தரவல்லவா.