இரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட வேலூர் - இராணிப்பேட்டை வழக்கறிஞர்கள்!

இரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட வேலூர் - இராணிப்பேட்டை வழக்கறிஞர்கள்!

 கு.அசோக்,

காட்பாடி மற்றும் அம்மூர் இரயில் நிலையங்களில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

வேலூர்

வேலூர்மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் முன்பு பார் அசோசியேசன் அட்வகேட் அசோசியேசன் மற்றும் சங்கங்களின்  வழக்கறிஞர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர் ரயில் நிலையத்தின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பின்பு ரயில் மறியலில் ஈடுபட்ட முயற்சி செய்தனர்.

  அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.  இருப்பினும் வழக்கறிஞர்கள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்த இந்திய குற்றவியல் நடைமுறை  சட்டம், சாட்சிகள் சட்டம்,உள்ளிட்ட மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.

 இதனால் காட்பாடி ரயில் நிலையம் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 அம்மூர்

 புதியதாக அமல்படுத்தப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு செய்து அம்மூர் ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு  நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு செய்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ரயில் முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ரயில் நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியும் வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   மேலும் மத்திய அரசு கொண்டு வந்த சமஸ்கிருத மொழியில் அமல்படுத்தப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ரயில்வே நிலையத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.