நறுவீ மருத்துவமனையில் உலக அவசர சிகிச்சை தின கருத்தரங்கு! நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்பு!

நறுவீ மருத்துவமனையில் உலக அவசர சிகிச்சை தின கருத்தரங்கு! நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்பு!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,

 வேலூர் நறுவீ மருத்துவமனையில் உலக அவசர சிகிச்சை தின கருத்தரங்கம் நடைபெற்றது.

  இக்கருத்தரங்கில் மாவட்டதில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

   நறுவீ மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை துறை ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கிற்கு, மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி தலைமை வகித்தார்.

 கருத்தரங்கில் வயது வந்தோருக்கான (adult) விபத்து அவசர சிகிச்சை என்ற தலைப்பில் டாக்டர் பொன்னிலவன், குழந்தைகளுக்கான விபத்து அவசர சிகிச்சை என்ற தலைப்பில் டாக்டர் ஆர்.அரவிந், கண்ணுக்கு புலப்படாத விபத்து அவசர சிகிச்சை என்ற தலைப்பில், டாக்டர் ஷைனிகா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

  இதில், வேலூர் நலம் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் ர.அசோக், டாக்டர் நர்மதா அசோக், மணிசுந்தரம் மருத்துவமனை டாக்டர் கே.மணிவண்ணன், தான்யா மருத்துவமனையின் டாக்டர். தானேஷ்பிரசாத், ஸ்ரீராகவேந்திரா மருத்துவமனையின் டாக்டர் கோபிநாத், உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

  கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நறுவீ மருத்துவமனையின் மருத்துவ சேவை துறையின் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.