காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட டிஐஜி!தூக்கி அடிக்கப்பட்ட கூடுதல் கண்காணிப்பாளர்!

ஜி.குலசேகரன்,
வேலூர் சிறையில் சிறைக்கைதி சித்தரவதை செய்யப்பட்ட புகார் தொடர்பாக நேற்று சிபிசிஐடி போலீசார் சிறைக்குள் விசாரணை நடத்தினர்.
அதில் குற்ற செயல் உறுதிப்படுத்தப்பட்டதால் வேலூர் ஆண்கள் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை டி.ஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலில் வைப்பு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
வேலூர்மாவட்டம்,வேலூர் ஆண்கள் சிறையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்தார்.
இவரை சிறைத்துறை டி.ஐஜி ராஜலட்சுமி தனது வீட்டில் வேலைக்கு அழைத்து சென்ற போது பணம் நகையை திருடியதாக கைதி சிவக்குமார் துன்புறுத்தப்பட்டார்.
தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.
அவரை அடித்து உதைப்பதற்காகவே ஷிப்ட் கணக்கில் காவலர்களை நியமித்தாராம் விஐஜி ராஜலட்சுமி.
இது தொடர்பாக சிவக்குமாரின் தாய் கலாவதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் அடிப்படையில் நேற்று ஆண்கள் மத்திய சிறையில் சி.பி.சி.ஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையில் இரவு வரை சிறையில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் வேலூர் சிறைத்துறை டி.ஐஜி ராஜலட்சுமி பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் இதே போன்று ஆண்கள் சிறையின் கூடுதல் சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு பணியிடமாற்றம் பட்டிருக்கிறார். சென்னை புழல் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் பரசுராமன் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
கைதி சித்ரவதை பிரச்சணையில் தற்போது சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சிறை காவலர்களும் குற்றச்சாட்டில் சம்பந்தபட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சிறைத்துறை வட்டாரத்தினை தெரிவிக்கின்றனர்.