இராசாயனம் மூலம் அழகி கொலை! சிக்கிய கணவர்!

இராசாயனம் மூலம் அழகி கொலை! சிக்கிய கணவர்!

 அ.ஜோ,

 2008-ம் ஆண்டின் மிஸ் சுவிட்சர்லாந்து இறுதிப்போட்டிக்கு தேர்வு ஆன அழகி இராசாயனத்தை பயன்படுத்தி கொல்லப்பட்டிருக்கிறார்.

  சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஜோக்சிமோவிச் (38). இவர் பயிற்சியாளராக வேலை செய்து வந்த அவர்,கடந்த பிப்ரவரி மாதம் பேசலில் உள்ள இவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக அவரது கணவர் தாமஸ் கைது செய்யப்பட்டார். முதலில் தம்மை விடுவிக்குமாறு கோரிய தாமஸ், அதன்பின் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

   விசாரணையில், மனைவி கிறிஸ்டினா முதலில் தம்மைக் கத்தியால் தாக்க வந்ததாகவும், அவரிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே தாக்கினேன் என தெரிவித்துள்ளார்.

   கிறிஸ்டினா கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக கூறும் மருத்துவ அறிக்கை, அவரது சில உடல் பாகங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு இரசாயனயங்கள் கொண்டு சிதைக்கப்பட்டதும், சில உடல் பாகங்கள் சகதியுடன் கலக்கப்பட்டன என குறிபிட்டிருக்கிறது.

  அதன் அடிப்படையில், இந்தக் கொலை தொடர்பான விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.

  அப்படியிருக்க ஜாமின் கோரிய தாமஸ் மனுவை அந்நாட்டு பெடரல் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.