மரபை உடைத்துவிட்டு இங்கு வந்துள்ளேன்! திமுக-வினர் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன்பேச்சு!
ஜி.கே.சேகரன்,
மரபை உடைத்துவிட்டு வந்துள்ளேன் - நான் 53 ஆண்டுகளாக ஒரே தொகுதியில் நின்று வெற்றியடைந்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே வியந்து பாராட்டினார் - துரைமுருகன் அடிப்படையிலிருந்து கட்சியிலிருந்து பல்வேறு போராட்டங்களின் போது சிறைகளுக்கு சென்று மி.சா சட்டத்தையும் சந்தித்து சிறையில் இருந்து தான் இன்று பொதுசெயலாளராகி உள்ளேன் - காட்பாடியில் திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள நாராயணணர் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது, இதில் திரளான திமுகவினர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நீர் வளத்துறை அமைச்சர், திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் பேசுகையில், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி இந்த பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் பொதுசெயலாளர் தலைவர் கலந்துகொள்ள கூடாது என்பது மரபு அந்த மரபை உடைத்துவிட்டு நான் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன்.
காரணம் மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் என்னிடம் கேட்டார் எத்தனை முறை நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள் என நான் 10-முறைக்கும் மேல் 53 ஆண்டுகளாக ஒரே காட்பாடி தொகுதியில் நின்று வெற்றி பெறுவதாக கூறினேன் அவரே வியந்து இந்தியாவில் இது போன்று ஒரே தொகுதியில் வென்று பல ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருந்தது நீங்கள் தான் என பாராட்டினார்.
இந்த துரைமுருகன் ஆரம்ப கட்டத்திலிருந்து, அண்ணா காலம் முதல் திமுகவில் பணியாற்றிவன். அதையெல்லாம் சொன்னால் கண்ணீர் வரும். பல போராட்டங்களை சந்தித்து பல சிறைகளுக்கு சென்றவன் நான். மிசாவிலும் சிறையில் இருந்தேன்.
எனக்கு எவ்வளவு உயர்ந்த பதவியை வழங்கியுள்ளனர் அண்ணா, நாவலர் பேராசிரியர் இவர்களுக்கு பின்னர் பெரிய பதவியான பொதுசெயலாளர் பதவியை அளித்துள்ளனர். அண்ணாவோடும் பணியாற்றியுள்ளேன் கலைஞரோடும் இருந்துள்ளேன் தற்போதும் முதல்வருடன் இருக்கிறேன்.
காங்குப்பத்தில் விவசாய, மிகவும் பிற்படுத்தப்பட்டு குடும்பத்திலிருந்து புறப்பட்ட நான் இன்றைக்கு இரண்டு கோடி பேர் இருக்கும் கட்சிக்கு பொதுசெயலாளராக உள்ளேன். இந்த பெருமை எல்லாம் எனக்கல்ல என்னை உருவாக்கிய உங்களுக்கு தான் சேரும்.
என்னை உருவாக்கிய இந்த தொகுதியை நான் கண்ணும் கருத்துமாக பார்த்துகொண்டுள்ளேன். இங்கு வட்டாட்சியர் அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பல மேம்பாலங்கள் மோர்தானா அணை உள்ளிட்டவைகளை ஏற்படுத்தியதும் இந்த துரைமுருகன் தான்.
நான் உங்களிடம் நன்றியை தான் எதிர்ப்பார்க்கிறேன் சில நேரங்களில் கலைஞர் சொல்வார் மேகம் மழையாய் பொழியும் நன்றி சொல்ல பார்க்கும் போது அது கலைந்து போய்விடும். சில பேர் நன்றி மறந்தாலும் கலைந்த மேகமாக என் உயிர் உள்ளவரையில் இந்த மண்ணோடு நான் பிணைந்திருப்பேன் என பேசினா