பணிகளில் சுணக்கமா? துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயும்! கலெக்டர் எச்சரிக்கை!

ஆர்.ரமேஷ்,
ஜோலார்பேட்டை ஒன்றியம், அம்மணாங்கோயில் மற்றும் அக்ரகாரம் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பணிகளில் சுணக்கத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதை கண்டறியப்பட்டால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அரசு ஊழியர்களை அவர் எச்சரித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மணாங்கோயில், அக்ரகாரம் ஆகிய ஊராட்சி அலுவலகங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இப்பகுதியில் எத்தனை குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்கள் எங்கே என்று கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சில குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று ஊராட்சி செயலாளர் தெரிவித்ததன் அடிப்படையில், ஏன் வழங்கப்படவில்லை என்று அதற்கான சம்மந்தப்பட்ட அலுவலர்களும், தாங்களும் விளக்கம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.
மேலும்,ஏற்கனவே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட இனங்களுக்கு, குடிநீர் வரி விதிக்கப்படாமல் இருந்த இனங்கள் குறித்த தகவல்களையும் கேட்டறிந்தார்.
அதேபோன்று அரசு அறிவிக்கப்பட்டுள்ள பணிகள் ஏன் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்று கேட்டறிந்து, தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தற்போது எத்தனை பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதற்கான ஆவணங்களை பாலீர்வையிட்டார்.
தற்போது 3 பணிகள் நடைபெறுவதாக தெரிவித்ததன் அடிப்படிப்படையில், இப்பணிகளில் எத்தனை பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளார்கள் என்றும், இவ்ஊராட்சியில் எத்தனை ஆபுழிசுநுபுறி பதிவு கொண்ட பணியாளர்கள் எத்தனை நபர்கள் உள்ளனர் என கேட்டறிந்ததில், 1200-க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாள அட்டை வைத்துள்ளனர் என தெரிவித்தனர்.
தற்போதைய நிலையில் ஊராட்சியில் என்னென்ன பணிகள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை கேட்டறிந்து, உடனடியாக பணிகளை துவங்கி, அடையாள அட்டை வைத்துள்ள நபர்களுக்கு பணிகள் வழங்கிட வேண்டுமென உத்தரவிட்டு, இவ்ஊராட்சிகளில் தனிமனித குடியிருப்பு கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்கப்பட்ட சுய சான்று அளிக்கும் திட்டத்தின் கீழ்; லீவவிள:ஃஃழடெவீஸீநிஜீய.வீஸீ.பழஎ.வீஸீ. என்ற இணையதள முகவரியில் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து ஒரு சதுர அடிக்கு ரூ.15/வீதம் சுய சான்றின் அடிப்படையில் கட்டட அனுமதி பெற்றிட பொதுமக்கள் அறிந்திடும் வகையில் விளம்பரப்படுத்திட வேண்டுமென தெரிவித்தார்.
தொடர்ந்து, அப்பகுதிகளில் நீர்நிலைகள், குட்டைகள் மேய்க்கால் நிலங்கள் சீர்படுத்தும் பணிகளுக்காக கிராம நிர்வாக அலுவலரிடம் இது குறித்த தகவலினை பெற்று, அப்பணிகளுக்கான ஒப்புதலை பெற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அப்பகுதியில் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீட்டு ஆணைபெற்ற குடியிருப்பு பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, ஏன் இன்னும் பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பிக்கவில்லை என்று திருமதி.செண்பகவள்ளி என்ற பயனாளிடம் கேட்டார்.
தொடர்ந்து, அவ்ஊராட்சியில் உள்ள பனந்தோப்பு பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆய்வு மேற்கொண்டார். இதில் அக்குடியிருப்பு உரிமையாளர் திருமதி.தமிழ்செல்வி பாரதி அவர்கள் தற்போது கட்டிடத்திற்கான தரைதளம் கட்டப்பட்டு, இதில் மண் நிரப்பி, நீர் ஊற்றி கூராற்றும் பணிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பணி நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, முத்தனார் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குறு விவசாய நிலங்களில் வரப்பு அமைக்கும் பணி மேற்கொள்வதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அரசு ஒதுக்கீடு பெற்ற திட்ட பணிகள் குறித்து ஊராட்சி தகவல் பலகையில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்த ஊராட்சியில் என்னென்ன பணிகள் நிர்வாகம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தினையும், எத்தனை நாட்களுள் முடிக்கப்பட வேண்டும் என்ற தகவலலினையும், இதற்கான மதிப்பீட்டு தொகை எவ்வளவு என்ற விவரங்களை தகவல் பலகையில் பதிவிடுதல் வேண்டும் என்று தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் இரவு, பகல் பராமல் கோப்புகள் நிலுவையில் இல்லா வண்ணம் தொடர் பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் நிர்வாக பணிகளில் கவனம் செலுத்தி தாமதபடுத்தா வண்ணம் பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது சம்மந்தமாக வாரத்தில் 2-நாட்கள் மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து, இவ்வாய்வுகளின் போது பணிகளில் சுணக்கத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவதை கண்டறியப்பட்டால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.