மரங்களை சாய்த்த சூறாவளி!

மரங்களை சாய்த்த சூறாவளி!
மரங்களை சாய்த்த சூறாவளி!

ஜி.கே.சேகரன்,

ஆம்பூர் அருகே சூரைகாற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் முழுவதும் சேதம் விவசாயி வேதனை அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது .அ

தே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் வாழை பயிர் விவசாயம்  செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால்  அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த இருநூறுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் தென்னை மரம் சூறாவளி காற்றில் சேதமடைந்தன இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்தது.

மேலும் வேளாண்மை துறை மற்றும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை வைத்தனர்..