20 துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிகள்!

20 துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிகள்!

  ஜி.கே.சேகரன்

 மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அரசு நல திட்ட உதவிகள் வழங்க தேர்வு செய்தல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பிற அரசு துறைகள் இணைந்து நடத்தும் மாற்று திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தேர்வு செய்தல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

   திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்ட இந்த முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட தொழில் மையம் மத்திய கூட்டுறவு வங்கி குழந்தைகள் வளர்ச்சி திட்ட முகமை உள்ளிட்ட சுமார் 20 துறைகளைச் சார்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க மனுக்கள் பெறப்பட்டது.

 அவர்களில் தகுதியான மாற்றுத்திறனாளி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

  மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமும் நடைபெற்றது. இந்த முகமானது திருப்பத்தூர் மாதனூர் ஆலங்காயம் கந்திலி நாற்றம்பள்ளி ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாலை 4 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.