ஏசி சண்முகம் தோல்வி பயத்தில் உலறுகிறார் கதிர்ஆனந்த் பேட்டி!

கு.அசோக்,
பாஜக வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தோல்வி பயத்தால் உளறுகிறார் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எந்த இடத்திலும் எந்த தவறும் நடக்கவில்லை அவர் பொய் சொல்கிறார் என திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொன்னார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் தொரப்பாடியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் பொறியியற் கல்லூரியில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர்.அனைக்கட்டு,கேவிக்குப்பம்,குடியாத்தம்,ஆம்பூர்,வாணியம்பாடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளின் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.பா
இம்மையத்தில் வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் பெட்டிகள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளை வேட்பாளர் என்ற முறையில் பார்வையிட்டார் .
பின்னர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது,பீஞ்சமந்தை ஜார்தான் கொல்லை ஆகிய பகுதிகளில் திமுகவினர், பாஜகவினர் உள்ளிட்டோர் அடித்து துரத்திவிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பாஜக வேட்பாளர் ஏ,சி.சண்முகம் கூறுவதுகுறித்து கேட்கப்பட்டது.
நாடாளுமன்றதொகுதிகளில் அனைத்து இடங்களிலும் அமைதியாக தேர்தல் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தேர்தல் நியாயமாக அமைதியாக அசம்பாவிதமின்றி நடந்ததாக தேர்தல் அறிக்கை கொடுத்துள்ளனர் .
ஏ,சி.சண்முகத்துக்கு தெரியும் எல்லா டி இடத்திலும் கேமராக்கள் இருக்கிறது. தோல்வி பயத்தில் ஏ.சி.சண்முகம் சப்பை கட்டு கட்டுகிறார் .நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் .
ஆனால் எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்று ஆருடம் சொல்லமாட்டோம், சிசிடிவி கேமராக்கள் எல்லாம் தொடர்ந்து இயங்கி வருகிறது. வருகை பதிவேடுகளும் தொடர் கண்காணிப்பிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் போடப்பட்டுள்ளது என கூறினார்.