பெண்ணை நீட் தேர்வு எழுத விடாமல் தடுத்த காவலர்!

கு.அசோக்,
இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இரண்டாம் நிலை காவலர்! பெண்ணின் குடும்பத்தை அடித்து துவம்சம் செய்த அண்ணன் தம்பிகள்! நீட் தேர்வு எழுத முடியாமல் அரசு மருத்துவமனையில் இளம் பெண் அனுமதி!
திருப்பத்தூர் மாவட்டம் , குருசிலாப்பட்டு அடுத்த புதுர் பகுதியைச் சேர்ந்த கமல்நாதன்.இவருக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 18 வயதில் தர்ஷினி தேவி என்ற பெண் பிள்ளை உள்ளது.
கமல்நாதனின் அக்கா மணிமேகலை அவருடைய மகன்களான கோதண்டன் (33) இவர் சென்னையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார், இவரும் மற்றும் மோகன் குமார் (30) ஆகிய இருவரும் அவ்வப்போது தர்ஷினி தேவியிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல நேற்று இரவு ஆறு மணி அளவில் கோதண்டன் மற்றும் மோகன் குமார் ஆகிய இருவரும் தர்ஷினிதேவியிடம் தகாத முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக தர்ஷினி பிரியா அலறியுள்ளார், இதனை அறிந்த அவருடைய பெற்றோர்களும் கோதண்டன் மற்றும் மோகன் குமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கமலநாதன் குடும்பத்தினரை கோதண்டன் மற்றும் மோகன் குமார் தாக்கியதில் கமல் நாதன் அவருடைய மனைவி இலக்கியா மற்றும் அவருடைய மகள் தர்ஷினிதேவி மற்றும் தகராறு தடுக்கச் சென்ற கோதண்டனின் தாயான மணிமேகலை ஆகியோரை தாக்கியதில் அவர்கள் பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பாதிப்படைந்த இளம் பெண் தர்ஷினி தேவி கூறுகையில்.தான் நீட் தேர்வுக்காக அரும்பாடு பட்டு படித்து வந்ததாகவும் ,இவர்களால் எனது நீட் எக்ஸாம் கனவு பாதிப்படைந்துள்ளது மேலும் தான்ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்டரில் தற்போது எக்ஸாம் எழுதிருக்க வேண்டும் அதை அனைத்தையும் கோதண்டன் மற்றும் அவருடைய தம்பி மோகன் குமார் கெடுத்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது கதறினார்.