கதலனை தட்டித் தூக்கி தாலிகட்டிக்கொண்ட நர்ஸ்!

கதலனை தட்டித் தூக்கி தாலிகட்டிக்கொண்ட நர்ஸ்!

 டி.இ.முகமது,

எட்டு வருடங்களாக காதலித்த பெண்ணை கழற்றிவிட முற்பட்ட நிலையில், அவரை தட்டித்தூக்கி தாலி கட்டிக்கொண்டார் நர்ஸ்.

இதுபற்றின விவரம் வருமாறு,

"கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரோஷினி தேவி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்துவரும் நிலையில், இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

 ரோஷினி தேவி   "தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தமிழரசனிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் தமிழரசன் தட்டிக்கழித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் ரோஷினி தேவி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இருவரை அழைத்து போலீசார் விசாரித்து கட்ட பஞ்சாயத்து செய்தனர்.

  அருகில் உள்ள கோவிலுக்கு தமிழரனை கூட்டிச்சென்று  ரோஷினி தேவிக்கு திருமணம் செய்து வைக்க பேச்சு வார் நடந்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்த பின்னரும், திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்த தமிழரசன் எங்கேப் மூடுக்கு தாவினார். ஆனால் ரோஷினி தரப்பினர் தமிழரசனை மடக்கி பிடித்து தப்பிவிடாமல் பார்த்துக் கொண்டனர்.

 அப்படியிருக்க ரோஷின் தமிழரசன் கழுத்தில் மாலை அணிவிக்க முயன்றார். ஆனால் அதறு தமிழரசன் எதிர்ப்பு தெரிஉவித்தார். ஆனாலும் வலுகட்டாயமாக அவருக்கு மாலை அணிவித்த ரோஷினி கையில் இருந்த தாலியை தமிழரசனிடம் கொடுத்து கட்டுமாறு செய்தார்.

 கதறிய தமிழரசனுக்கு தப்பிக்க வழியில்லை.  இந்நிலையில் தனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்ததாக தமிழரசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 பதிலுக்கு எனது கணவரின் உறவினர்களால் தனக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக்கூறி ரோஷினி தேவியும் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

  எட்டு வருடங்களாக ஜாலியாக இருந்துவிட்டு  வேற ரூட்டு போட்ட தமிழரசனை காதலி ரோஷினி தட்டி தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.