வடசென்னை திமுக வேட்பாளரை கலாய்த்த இளைஞர்!

வடசென்னை திமுக வேட்பாளரை கலாய்த்த இளைஞர்!

உ.சசிகுமார்,

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பிரச்சாரம் செய்த போது பரபரப்பு ஏற்பட்டது.

புளியந்தோப்பு திருவிக நகரில் அவர் கூட்டணி கட்சியினருடன் ஜீப்பு மூலம் வாக்கு சேகரித்த போது, அவரை இடை மறித்த ஒரு இளைஞர், மழை நீர் வெள்ளம் வந்து நாங்க எல்லாம் பாதித்த போது நீங்க எங்க போயிருந்தீங்க?

இந்த பக்கமே எட்டிப் பார்க்கவில்லை,  இப்போது எதற்காக இங்கு வந்தீங்க தயவுசெய்து திரும்பி போய் விடுங்கள் என்று கூச்சலிட்டார்.

அதன்பின் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

இது போன்ற காட்சிகள்  வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.