ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்த புறா!

ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்த புறா!

  ஜி.கே.சேகரன்,

  வானில் ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்த புறாவின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.

   வேலூர்மாவட்டம், காட்பாடியில் ஓமர் புறா வளர்ப்போர் சங்கம் சார்பில் விழா ஒன்று மாநில தலைவர் தன் சிங் தலைமையில் நடைபெற்றது. இது வானில் ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்த புறா தொடர்புடையதாகும்.

    இதில் மாவட்டத்தலைவர் பாஸ்கர்,மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் 2020 முதல் 2023 வரை 4 ஆண்டுகள் நடத்தப்பட்ட புறா போட்டிகளுக்கான பரிசளிப்பும் நடந்தது.

 இந்த ஆண்டுநடத்தப்பட்ட போட்டியில் 1000 கிலோ மீட்டர் மகாராஷ்டிரா மாநிலம் பந்தானவூர் என்ற இடத்திலிருந்து 325 புறாக்கள் பறக்கவிடப்பட்டது.

   இதில் வேலூர் குயின் என்ற புறா 48 மணி நேரத்தில் கடந்து வந்து சாதனை படைத்தது.

  இதனால் புறாவின் உரிமையாளர் மதுசூதனனுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

 இதே போன்று 4 ஆண்டுகளில் புறாக்கள் முதலிடம் வென்றவைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகளும் கோப்பைகளையும் வழங்கப்பட்டது.

  இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில் இது பந்தயம் கிடையாது விளையாட்டு, வழக்கமாக நடத்தப்படும் ஒன்று தான் என்கிறார்கள்.