ஆற்று மணலில் ஓடி அசத்திய மக்கள்!

ஆற்று மணலில் ஓடி அசத்திய மக்கள்!

 கு.அசோக்,

 இராணிப்பேட்டை அருகே சீக்கராஜபுரத்தில்  ஆறுகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் 5 வயது முதல் 60 வரை உள்ள போட்டியாளர்கள் ஆற்று மணலில் ஓடி அசத்தினர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த சீக்கிராஜபுரம்  கிராமத்தின் அருகே உள்ள பொன்னை ஆற்றில் ஜாலி ரன்னர்ஸ் இரண்டாம் ஆண்டை முன்னிட்டு ஆறுகளை பாதுகாக்கவும் தண்ணீரை தேடியும் என்ற தலைப்பில் 5 வயது முதல் 60 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு ஆற்று மணல் மாரத்தான் ஓட்ட பந்தயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆற்று மணல் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 14 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஐந்து கிலோ மீட்டரும் அதற்கு மேல் உள்ளவர்கள் 8 மற்றும் 15 கிலோ மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடினர்.

 மேலும் போட்டியில் உத்திரபிரதேசம், பெங்களூர், மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மற்றும் பல மாநிலங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்  ஆர்வமுடன் கலந்து கொண்டு  ஆற்று மணலில் ஓடி அசத்தி காட்டினர்கள்.

 இந்த,மாரத்தான்  ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற   போட்டியாளர்களுக்கு பதக்கங்கள்  மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது