850 பேர் பங்கேற்ற சிலம்பம் - சுருள் போட்டி!

850 பேர் பங்கேற்ற சிலம்பம் - சுருள் போட்டி!

 கு.அசோக்,

 வேலூரில் மாநில அளவிலான வில்வித்தை மற்றும் சிலம்பம் போட்டிகள் - 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்  வென்றவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

 வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலிகிராஸ் பள்ளியில் மாநில அளவிலான வில் வித்தை மற்றும் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டது.  இதனை தேசிய பயிற்சியாளர் விக்னேஷ் ராவ் துவங்கி வைத்தார்

சிலம்பம் மற்றும் வில்வித்தை போட்டியில் 850 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து பங்கேற்றனாஇதில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் 14,17.21 ஆகிய வயது பிரிவுகளில் கலந்துக் கொண்டனர்.

  அப்போது சுருள், வாள் சுற்றுதல் மான் கொம்பு சிலம்பம் ஒற்றை கொம்பு இரட்டை கொம்பு ஆகிய போட்டிகளும் வில்வித்தை போட்டிகளும் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு காமினி மத்தாய் மற்றும் பள்ளியின் முதல்வர் லில்லி உள்ளிட்டோர் பரிசுகள், பதக்கங்கள், கோப்பைகளை வழங்கினார்கள்.  மாணவ, மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தனர். இதில் திரளான பெற்றோர்களும் மாணவ.மாணவிகளும் கலந்துகொண்டனர்.