ஆரணி தச்சூர் ஊராட்சியில் பற்பல ஊழல்கள்! தலைவரை பணிநீக்கம் செய்ய கோரிக்கை!

ம.முருகன்,
தச்சூர் ஊராட்சியில் ஊழல் முறைகேடு செய்த பஞ்சாயத்து தலைவர் ,செயலர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என பொது மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குட்பட்ட தச்சூர் பஞ்சாயத்தில் பாமக கட்சியைச் சேர்ந்தவர் டி.வடிவேலு இவர் தச்சூர் ஊராட்சி மன்றப் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வருகிறார். இவருடன் சேர்ந்து பஞ்சாயத்து கிளார்க் யூ. அகமது அலி கூட பல்வேறு ஊழல் முறைகேடுகள் செய்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.
தச்சூர் பஞ்சாயத்தில் வசித்து வரும் சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பஞ்சாயத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகள் குறித்து தகவல் கேட்டுக் கொண்டதின் பேரில், அந்த பஞ்சாயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஊரக வளர்ச்சி துறை மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பிரிவுக்கு மற்றும் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகிய இடங்களுக்கு புகார் மனுவாக அனுப்பியுள்ளனர்.
கடந்த 2020-2021 ஆம் ஆண்டுகளில் தனிக்கை அறிக்கையில் எந்தவிதமான பதிவேடுகள் மற்றும் செலவுசீட்டுகள் வைக்கவில்லை, செலவுகளை வழிகாட்டல் விதிமுறைபடி செய்யாமல் தன்னிச்சையாக அதிக செலவு செய்துள்ளார். அதற்கும் செலவு சீட்டுகள் இல்லை. இதிலும் பெருமளவு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளது.
திட்ட பணிகளில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. பக்க கால்வாய், சாலை, மேம்பாலம், போர்வெல், பைப்லைன் போன்ற பணிகள் தரமானதாக செய்யாமல் தரமற்றதாக பணிகள் செய்துள்ளார்.
14வது நிதியில் தெருவில் பக்க கால்வாய் செய்தது அந்த கால்வாய் நல்ல நிலையில் இருந்தது. அது 2015-2016 ஆம் ஆண்டில் அதே 14வது நிதியில் போடப்பட்டது அதனை எந்தவித கிராம சபை மற்றும் கிராம மக்கள் ஒப்புதல் இல்லாமல் இடித்துவிட்டு புதிய பக்க கால்வாய் அமைத்ததில் ஊழல்.
15வது நிதியில் போட்ட முருகன் கோவில் போர்வெல் மோட்டார் பைப்லைன் அமைத்த பைப்புகள் மிகவும் தாமற்றது தண்ணீர் விட்டவுடன் அனைத்தும் வெடித்துவிட்டது. திட்டபணிகள் செய்த ஆவணபதிவேடுகள் எந்தவொரு கிராம சபையிலும் பார்வைக்கு வைக்கவில்லை. கிராம சபையில் மற்ற ஆவணப் பதிவேடுகள் செல்வு சீட்டுகள் வைக்கவில்லை. இது குறித்து பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.