சொத்து பிரச்சனை அண்ணனை போட்டு தள்ளிய தம்பி!

கு.அசோக்,
ஒரே வீட்டில் வசித்து வந்த அண்ணன் தம்பி மூன்று நபர்களுக்குள் வீடு பிரிந்து செல்வது குறித்து ஏற்பட்ட தகராறில் கட்டையால் அண்ணன் அடித்து கொலை தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(35) மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு புனிதா(30) என்ற மனைவியும் தீபாக்(10) சரண்யா(9) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மேலும் சரவணனுடன் பிறந்தவர்களான சத்தியமூர்த்தி(28) மற்றும் சௌந்தர்ராஜன்(26) ஆகிய இருவரும் சரவணன் குடியிருக்கும் வீட்டிலேயே ஒன்றாக தங்கி வசித்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக சரவணன் தனக்கு திருமணமாகிவிட்டது எனவும் இதனால் நீங்கள் வேறு வீடு கட்டிக்கொண்டோ அல்லது வாடகைக்கு வீடு எடுத்து செல்ல வேண்டும் என்று சகோதரர்களான சத்தியமூர்த்தி மற்றும் சௌந்தரராஜனிடம் நீண்ட நாட்களாக தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரவணன் சத்தியமூர்த்தி சௌந்தரராஜன் என அண்ணன் தம்பி மூவரும் மது அருந்திவிட்டு வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது சரவணன் தனது சகோதரர்களை வேறு வீடுகளுக்கு செல்லும்படி மீண்டும் தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது சரவணன் மற்றும் இரண்டாவது தம்பியான சௌந்தரராஜன் என்பவருக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரவணனின் முதலாவது தம்பியான சத்தியமூர்த்தி ஆத்திரமடைந்து இரண்டு சகோதரர்கள் சண்டை போடுவதை தடுக்கும் விதமாக கட்டையை எடுத்து அண்ணன் சரவணனின் மீது தம்பி சௌந்தரராஜனின் மீதும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சரவணன் தலையில் பலத்த காயமடைந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சரவணனின் உடல் வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் சௌந்தரராஜன் தலையில் காயங்களுடன் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற்ற சம்பவம் குறித்து உயிரிழந்த சரவணனின் மனைவி புனிதா அளித்த புகாரின் பேரில் ஆற்காடு கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த சரவணனின் தம்பி சத்தியமூர்த்தி என்பவரை கைது செய்துள்ளனர்