பத்து மணி நேரம் எரிந்த தேங்காய் நார் கம்பெனி!

பத்து மணி நேரம் எரிந்த தேங்காய் நார் கம்பெனி!

ஜி.கே.சேகரன்,

தேங்காய் நார் கம்பெனியில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த  நார்கள் தீயில் கருகி சாம்பல் ஆனது.

25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 10 மணி நேரம் தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

வேலூர் மாவட்டம்,காட்பாடி அடுத்த திருவலம், மேல்மாந்தாங்கல் பகுதியில் பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான இடத்தில்  இளையராணி என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். 

இங்கு கயிறு தயாரிக்க தேவையான நார் மற்றும் கோழி பண்ணைகளுக்கு தேவையான நார் தூள்கள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் வீசிய பலத்த காற்றினால் நார்க் குவித்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு மேலே சென்ற மின் கம்பிகள் உராசியதில் தீப்பொறி ஏற்பட்டது. 

அவை அங்குகுவித்து வைக்கப்பட்டிருந்த நார்கள் மீதி விழுந்ததால் தீப் பிடித்து எரிய தொடங்கியுள்ளது. 
சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் கொட்டப்பட்டிருந்த நார்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகின.மற்றும் மூன்று இயந்திரங்களும் தீயில் எரிந்து நாசமாகியது.

 தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர், காட்பாடி, சிப்காட் ஆகிய மூன்று தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த சுமார் 25 க்கும்  மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்நேற்று இரவு 10 மணி முதல்தொடர்ந்து போராடி இன்று காலை 8.30 மணி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பணி சுமார் 10 மணி நேரம் தொடர்ந்தது

அதிக அளவிலான நார்கள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதாலும் காற்று வீசுவதாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது என்று தீயணைப்பு வீரர்கள் சொன்னார்கள்.

இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து திருவலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.